🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 43
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: J.Thamanya
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Nawalapitiya
#Edukinniya #StoryCompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
அந்த பொதியை பார்த்தார். அந்த பொதியில் இரத்த கரை படிந்திருந்தது உடனே அவர் பயந்து போனார். அந்த பொதியை பிரித்து பார்த்தார் அதில் இறந்த நாய் ஒன்றின் சடலம் இருந்தது. அவர் பயந்து போனார். உயிர் இரக்கம் கொண்ட அவரின் கண்களில் நீர் மல்கியது.உடனே அவர் அருகிலுள்ள போக்குவரத்து போலீசாரை அழைத்து பொதியை காண்பிதார். போக்குவரத்து போலீசார் உடனே அதை காவல் நிலையத்திற்கு அறிவித்தார்.
காவல் நிலைய போலீசார் அந்த நாயை பார்த்தனர். உடனே அந்த நாயின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் காணாமல் போன நாய்களின் விபரம் பற்றி சமூக வலைத்தளங்களில் தேடினர். இரு தினங்களுக்கு முன்னர் அந்த ஊரின் நீதிபதியுடைய நாய் காணாமல் போனது பற்றி தெரிந்தது. உடனே நீதிபதிக்கு தகவல் தெரிவித்து உடனே அந்த இடத்திற்கு வரும்படி கூறினர். நீதிபதி வந்து பார்த்து விட்டு அந்த ஊரின் பாதுகாப்பிற்காக கண்காணிக்கப்படும் அமைப்பில்(cctv) யில் பரிசோதனை செய்தனர். அதில் அந்த குற்றவாளியின் நண்பர்கள் நீதிபதியை கொலை செய்ய அவரின் வீட்டிற்கு வந்த போது அவரின் நாய் அவர்களை போக விடாது தடுத்தது. இதனால், கோபமடைந்த அவர்கள் நாயையும் அவர்கள் வந்த வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்று கொலை செய்து உள்ளனர். இதை பார்த்தால் நீதிபதியின் கண்களில் நீர் மல்கியது. அடுத்தநாள் உயிர் கொலை செய்த அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு காரணமான கணேஷனுக்கு சன்மானம் வழங்கப்பட்டது. கணேஷனின் பிள்ளைகளின் கல்விச்செலவையும் அவரே ஏற்று கொள்வதாக உறுதி அளித்தார். எனவே நாமும் உயிர் கொலை செய்வது தவறானது என்பதை உணர்வோம்.

