Short story competition-07

Short story competition-07


 🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝

               -----------------------------------

🔹𝗡𝗼: 07
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: F.Mohammed Aabith
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Sammanthurai

#Edukinniya  #StoryCompetition

     ➖➖➖➖➖➖➖


வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில்   வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை  கண்டு
அப்பொதியை பார்த்துக் கொண்டே இருந்தார். அப்போது, அதற்குள் ஏதோ அசைவது போல் இருந்தது. அவர் மிகவும் பயமடைந்தார். அதற்குப் பிறகு, அப்பொதியை எடுத்துக் கொண்டு யாருமில்லாத இடத்திற்குச் சென்று அப்பொதியை திறந்த போது அவர் மிகவும் வியப்படைந்தார். காரணம், அதனுள் ஓர் அழகான குழந்தை இருந்தது.

பிறகு, அக் குழந்தையை எடுத்துக் கொண்டு மிக அவசரமாக வீட்டிற்குச் சென்று தன் மனைவியிடம் நடந்தவற்றைக் கூறி குழந்தையைக் காண்பித்தார்.  அப்போது, அவரின் மனைவி சிறிது நேரம் யோசித்தாள்.

"என்ன யோசிக்கிறாய் கமலா" என கணேஷன் கேட்டதற்கு,
"ஏற்கனவே நம் இரு பிள்ளைகளின் கல்விக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலைமையில் இன்னொரு பிள்ளையை வளர்ப்பதற்குரிய வசதிகள் எம்மிடமில்லை. அதனால் யோசித்துக் கொண்டிருந்தேன்." என்றாள்.

அப்போது கணேஷன்,
"அது எம்மோடு இருக்கட்டும், இக் குழந்தையை நாமே வளர்ப்போம்" என சொல்லிக் கொண்டிருக்கும் போது...,

குழந்தை திடீரென அழுதது.
கணேஷனின் மனைவி குழந்தையை தூக்கி தாலாட்டுப் பாடி  அழுகையை நிறுத்தினாள்.
கமலா இப்போது கணவனின் பேச்சை ஒப்புக் கொண்டு குழந்தையை வளர்க்க சம்மதித்தாள்.

கணேஷனின் வீட்டுவாசலில் தபால்காரர் ஒரு செய்தியைக் கொண்டு வந்து அவரை அழைத்தார்.
"என்ன விஷயம்"  என கமலா கேட்க,
"எமக்கு லொட்டரி 5 இலட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது" என கணேஷன் கூறினார்.

இக் குழந்தை வந்த அதிர்ஷ்டமோ என்னவோ எம் கஷ்ட நிலைக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது.  என இருவரும் சந்தோஷப்பட்டனர்.
அவர்களது பிள்ளைகளுக்கும் எல்லாவற்றையும் கூறி, அவர்களது வறுமையைத் தீர்க்க வழியும் தேடிக்கோண்டனர்.

கணேஷன் செய்த துப்பரவு பணியை விட்டுவிட்டு சொந்தமாக ஒரு சாப்பாட்டுக் கடையை நடத்தினார். 
அதில் சிறந்த இலாபமும் பெற்றார்.
சில மாதங்கள் சென்றபின் அவரது சாப்பாட்டுக் கடை நட்சத்திர ஹோட்டலாக மாறியது.

அவரது பிள்ளைகளின் கல்விக்கும் தடை இல்லாமல் வாழ்ந்தனர்.