Short story competition-47

Short story competition-47


 🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝

               -----------------------------------

🔹𝗡𝗼: 47
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.A.Abdhullah
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Kalpitiya

#Edukinniya  #StoryCompetition

     ➖➖➖➖➖➖➖


வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில்   வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை  கண்டு
எடுத்தார்.அதை மெதுவாகத் திறந்து பார்த்தார். என்ன அதிசயம்! ... உள்ளே பணம் இருந்தது.அக்கம் பக்கம் பார்த்தார். அங்கு யாருமே இல்லை. பணத்தை கையில் எடுத்து எண்ணினார். ஐந்து இலட்சம் பணத்தொகை இருந்தது. என்ன செய்வது என்று யோசித்தார். அவரின் குடும்ப சூழ்நிலை கண்முன் காட்சியளித்தது. இந்தப் பணத்தை குடும்ப செலவுக்காக செலவழிப்பதா? இது நியாயமானதா? என அவரின் உள் மனம் உறுத்தியது.மறுக்கனம் யோசித்தார்.இது தவறானது. பணம் நமக்கு சொந்தமல்ல இதை "பொலீசாரியிடம் ஒப்படைப்போம் ."என்று பொலீசாரிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு சென்று நடந்தவற்றை தன் மனைவியிடம் கூறினார். மனைவியோ நல்ல காரியம் செய்தீர்கள் ....."இது நமது பணம் அல்ல. நமது கஷ்டங்களுக்கெல்லாம் இறைவன் கண் திறப்பான். நாம் நேர்மையான வழியில் தான் உழைத்து வாழ வேண்டும்" என்றார் மனைவி.பிள்ளைகளும் தனது அப்பாவை பாராட்டி புகழ்ந்தார்கள்.தொலைபேசி மணி ஒலித்தது."அப்பா யார்?" என்று கேட்டார்."உங்களது மகள் உலகளாவிய ரீதியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.அதற்கு சன்மானமாக உங்களுக்கு பத்து இலட்சம் ரூபாய் பெருமதியான பரிசு கிடைத்துள்ளது.என்பதையும் மகிழ்ச்சியாக அறிவிக்கின்றோம்.எதிர்வரும் 01.05.2025.அன்றுபரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.அப்பா தனது மகளைக் கட்டி அனைத்து மகிழ்ச்சியடைந்தார். பிள்ளைகள் அப்பாவை பார்த்து "நீங்கள், யாரோ கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை நேர்மையாக எடுத்து கொடுத்தீர்கள். இறைவன் உங்கள் நற்செயலை கண்டு உங்கள் குடும்பத்தின் கஷ்டத்தை போக்குவதற்காக, இறைவன் அதை இரட்டிப்பாக பரிசாக தந்துள்ளான்".என்று பிள்ளைகள் கூறினார்கள். "ஒருபோதும் மற்றவர்களின் பணத்திற்காக ஆசைப்படக்கூடாது. நேர்மையாக உழைத்து வாழ்வதே சிறந்தது...."என்று அப்பா கூறினார்.அனைவரும் மகிழ்ச்சியில் இறைவனை வணங்கி துதி செய்தார்கள்.

*பார்த்தீர்களா தம்பி தங்கைகளா பிறருடைய சொத்துக்காக ஆசைப்படக்கூடாது. எந்த கஷ்டம் வந்தாலும் நாம் நேர்மையாகவே உழைத்து வாழ வேண்டும்......*
🤝