Rizna Rizwan Poem

Rizna Rizwan Poem

 Rizna Rizwan கவிதை


பிரிவு


பிரிவு என்ற கொடுமை

பரிவின்றி வந்ததே😥

பாங்கிகளாம் எம்மை👭🏻

பகலிரவாய் வதைத்ததே😔


பட்டாம்பூச்சிகளாய்🦋

பறந்து திரிந்த எம்மை

A/L எனும் சிறை

அடைத்துக் கொண்டதே...🔒


சிதறிய முத்துக்களாய்🦪

சிதறிப்போனாலும்-எம் நட்பு

சிதைந்திடாமலே

சிறக்க வேண்டுமடி...🥲


பிரியும் வேலையிலும்

உயிரும் உடலுமாய்👭🏻

உருகுவதைப் பார்த்தோ

உலகமே அதிருது⚡🌫️


மௌன ராகங்கள்

பாடுது காற்று🌬️🍃

மெல்லிய கீரலை

மின்னுது ஆகாசம்⚡


நாம் சிந்தும் வெந்நீரில்

எரியுது எம் உள்ளங்கள்😔

மேகம் சிந்தும் கண்ணீரில்🌧️

ஆறுது நம் உதயங்கள்...🌄


கவிதைகள் எழுதத்

தெரியாதடி - எனக்கு

கவலைகள் கரைக்கவும்

தெரியாதடி....💔😢


நறுவீசும் இனிமையை👭🏻

நறுக்கும் ஒரு கவலை😖

தேற்றிக் கொள் மனதை😢

நம் பிரிவும் இனிக்கும்😏


ஓரிரு வார்த்தைகள்

ஓலமிடுது என் மனம்💓

அதை ஓலையின் ஓரமாய் ஓட்டுகிறேன் ஒரு கணம்📜✍🏻❣️


By : Rizna Rizwan

Arafa Central College, (National school), Weligama.

2023 A/L batch





ஏனைய அனைத்து கவிதைகளையும் பார்வையிட👇👇

               Click


உங்களது ஆக்கங்களும் இவ் இணையத்தளத்தில் வர விரும்பினால் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

உங்களது ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்க 👇👇

            Admin