Short story competition-41

Short story competition-41


 🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝

               -----------------------------------


🔹𝗡𝗼: 41

🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: F.Shara

🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Vavuniya 


 #Edukinniya #StoryCompetition


     ➖➖➖➖➖➖➖



வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு

அதனை எடுப்பதற்கு பயத்துடன் அக்கம் பக்கம் பார்த்து விட்டு அதனை எடுத்து அவ்விடத்தை விட்டு சற்று ஓரமாக சென்று அதனை அவிழ்த்துப் பார்த்தார். அதில் நிறைய பணம் இருந்தன இதை பார்த்து அவரது உடல் நடுங்கியது. இப்பணம் யாருடையது என விசாரித்து விட்டு பொலிஸிடம் ஒப்படைக்கலாம் என எண்ணியவருக்கு திடிரென தனது குடும்ப நிலமை பற்றியும் தனது தந்தையின் மருத்துவச் செலவு பற்றிய நினைவு வந்தவராக அந்த பையை எடுத்துக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்று அப்பொதியைப் பற்றி யாரிடமும் கூறாமல் ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு தனது தாயின் அருகில் வந்து அமர்கிறார்.அம்மா எனக்கு ஒரு சந்தேகம் நாம் ஒரு பொருளை கண்டெடுத்தால் அது யாருடையதும் இல்லை என்றால் அது நமது தேவைக்கு பயன்படுத்தலாம் தானே இறைவன் நமக்கு தந்ததாகவும் இருக்கலாம் தானே அம்மா இதனைக் கேட்ட தாயாருக்கு ஒரு நினைவு வந்தவராக ஒரு காலத்தில் எனது தகப்பனுக்கு அவசரமாக அறுவை சிகிச்சைக்காக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த பணம் காணாமல் போய்விட்டது எங்கு தேடியும் கிடைக்கவில்லை அறுவை சிகிச்சை செய்யாத காரணத்தினால் அவர் இறந்து விட்டார் என அழுதார். அந்த பணத்தை கண்டெடுத்தவர் தந்திருந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். என்றார் இதைக் கேட்ட கணேஷனின் மனது மிகவும் வேதனையாக இருந்தது இப்பணத்துக்கு சொந்தகாரர் எத்தேவைக்கு வைத்திருந்தார்களோ? எந்த நிலயிலும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது என்றெண்ணி தான் சுயநலமாக சிந்தித்ததை நினைத்து வெட்கப்பட்டார். அப்பொதியை எடுத்துக் கொண்டு பொலிஸிடம் ஒப்படைத்து விட்டு மனநிறைவுடன் வீடு திரும்பினார்.