Short story competition-18

Short story competition-18


 🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝

               -----------------------------------


🔹𝗡𝗼: 18

🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: Fathima

🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Kurunegala 


 #Edukinniya #StoryCompetition


     ➖➖➖➖➖➖➖



வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு

இது என்னவாக இருக்கும் என்று யோசித்தவராக அப்பொதியை கையில் எடுத்தவர் அதனை பிரித்துப் பார்க்க எண்ணும் போதே அவரை வேலைக்காக அழைத்திருந்தார் இன்னொருவர்.


சரி, பிறகு பார்க்கலாம் என்று எண்ணிய கணேஷன் அதனை தனது உணவுப் பொதியுடன் சேர்த்து வைத்துவிட்டு வேலையில் மும்முரமானார்.நேரம் மாலை 5:00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.சூரியன் தன்னை மறைத்து கடலில் மூழ்கி இருந்தது.தனது உடலுக்கு ஓய்வு கொடுத்த கணேஷன் மனதுக்கும் ஓய்வு கொடுக்கும் நோக்குடன் தனது பிள்ளைகளை நினைத்து வயல் காற்றை அனுபவித்தவாறே ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு வயல் வரப்பில் அமர்ந்து கொண்டார்.


திடீரென தான் அதிகாலையில் பார்த்த பொதி நினைவுக்கு வரவே அதனை எடுத்து யோசனையுடனேயே பிரித்துப் பார்க்க ஆரம்பித்தார்.

கணேஷனின் கண்கள் ஜொலித்தன.பொதி நிறைய ஆயிரம் ரூபாய் பணக் கட்டுக்கள்.

பணத்தை கையில் எடுத்தவர் அதனை முகர்ந்தவாறே தனது வாழ்க்கை மாறப் போவதை எண்ணி மகிழ்வதா, இல்லை யாரோ ஒருவருக்கு சொந்தமான பணத்தை அனுபவிக்கப் போகிறோமே என்று எண்ணி வருந்துவதா எனும் மனநிலையில் இருந்தார்.


ஒருசில நிமிடங்கள் கண்களை மூடி ஆழ்ந்து யோசித்தவர் 

இல்லை, இது எனக்குரியது அல்ல.எனது உடல் உழைப்பால் வந்தது அல்ல என்று எண்ணியவர் அதனை உரியவரிடம் சேர்த்து விடும் நோக்கத்துடன் அப்பணப் பொதியை தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் ஒப்படைத்தார்.

உழைப்பாலே உயர வேண்டும் என்று எண்ணிய கணேஷன் மனநிறைவுடனும், சிறு புன்னகையுடனும் வீடு நோக்கி நடந்தார் தனது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக...