🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 25
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: K.Anjana
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Sedawatta
#Edukinniya #StoryCompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
அந்தப் பொதியை கண்டு கணேஷன் குழம்பினார். "யாராவது இதை இழந்திருக்கலாம்... உள்ளே என்ன இருக்குமோ?" என்ற குழப்பத்துடன் மெதுவாக அதை திறந்தார்.
அதில் இருந்தது ஒரு சின்னதான மடிக்கணினி, சில ஆவணங்கள் மற்றும் ஓர் அடையாள அட்டை. ஆட்டையில் ஒருவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணும் இருந்தது – "அப்துல் ரஹ்மான், சமூக ஆர்வலர்".
"இவர் நமக்குப் பழக்கம் இல்ல... ஆனாலும் ஒரு நல்ல மனுஷர் போல இருக்கார்," என்று எண்ணிய கணேஷன், வேலை முடிந்ததும் அந்த எண்ணுக்கு அழைத்தார்.
அப்துல் ரஹ்மான் எதிர்பாராதவிதமாக, மிகவும் நன்றி தெரிவித்தார். "அந்த லேப்டாப்புல தான் என்னோட பள்ளி குழந்தைகளுக்கான இலவச கல்வி திட்ட திட்டங்கள், வீடியோ பாடங்கள் எல்லாம் இருக்குது. இழந்துட்டேனு நம்புறதே இல்ல..."
அவர்களின் சந்திப்பு ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. கணேஷனின் நேர்மை மற்றும் நேர்த்தி பாதிக்கப்பட்ட ரஹ்மானின் கண்களில் கண்ணீரை ஏற்படுத்தியது. அவர் கணேஷனை தனது சமூக சேவைகளில் பங்கு கொள்ள அழைத்தார்.
முறையான பயிற்சிக்குப் பிறகு, கணேஷன் இன்று சமூகத்தில் உயர்ந்த மனிதராகவும், அநாதை குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றின் நிர்வாகியாகவும் வளர்ந்துள்ளார்.
அந்த ஒரு பொதியால் ஒரு மனிதனின் வாழ்க்கை பாதை முற்றிலும் மாறியது.