🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 26
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.R.M.Hamdhan
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Kalpitiya
#Edukinniya #StoryCompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
யோசனையில் ஆழ்ந்துக்கொண்டான்.பொதிக்குள் உள்ள பொருள் என்ன வென்று யோசித்தவாறு பதற்றத்துடன் அதன் அருகில் சென்றான்.யாரோ தவறவிட்ட பொருள் என்று அவனுக்கு புரிந்தது.அதனை எடுத்தவுடன் பணக்கட்டுக்கள் போன்று உணர்ந்தான். அப்பொதியை யாரும் அறியாத வண்ணம் எடுத்து மறைத்து விட்டு தனது வேலையை தொடங்கினான்.வேலையின் போது ஒரு வகை தடுமாற்றமும் அவனிடம் காணப்பட்டது.உணவு இடைவேளையில் திறந்து பார்த்தான்.அவன் உணர்ந்தது போலவே பணக்கட்டுக்கள் காணப்பட்டது. சந்தோஷம் கலந்த பயத்துடன் அன்றைய நாள் சென்றது.பணியின் இடை நடுவே இப்பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைப்பாதா?அல்லது தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு செலவிடுவதா?போன்ற எண்ணங்களில்அன்றைய நாள் பணிகளை செய்து கொண்டிருந்தான். மாலை பணி முடிந்தவுடன் மீண்டும் கையோப்பத்தையிட்டு வீடு திரும்பினான்.மனைவியிடம் நடந்தனைக் கூறினான்.மனைவியும் கணேஷனைப்போன்ற குழப்பத்திலே காணப்பட்டாள்.பணத்ததை அலுமாரியில் வைத்து விட்டான். இரவு அவன் இரவுணவு உண்டுவிட்டு உறங்கச் சென்றான்.ஆழ்ந்த தூக்கத்தில் அவனுக்கு ஒரு கனவு தோன்றியது.கனவில் தான் கஷ்டப்பட்டு உழைத்த பணம் வீதியில் தவறி விட்டது. போலவும் தனது மருத்துவ செலவிற்காகவும் பிள்ளைகளின் எதிர்காலமத்திற்காகவும்சேர்த்து வைத்த கணேஷன் பணம் காணாமல் போனது போலவும் பணம் காணாமல் போனதால் பணத்தை தேடி தேடி அவனுக்கு ஏற்பட்ட கவலையும் கனவில் கண்டான்.உடனே விழித்துக் கொண்டான்.கனவில் கண்ட விடயங்களை யோசித்துப்பார்த்தான்.தன்னைப்போன்ற ஓர் வறுமைக் கோட்டின் கீழ் வாழக்கூடிய ஒருவரின் பணத்தை நாம் வீட்டிற்கு கொண்டு வந்திருக்கூடாது என்றும்.இப்பணத்தை அவரிடம் கொண்டு சேர்ந்து நமது கடமையெண்பதனையும் அப்பொழுது உணர்ந்துக் கொண்டார்.தனது தவறையும் உணர்ந்த்து கொண்டார்.மனைவியிடம் தனது தவறை கூறினார்.மனைவியும் அவ்வாறே செய்ய சொன்னார்.அடுத்த நாள் அதிகாலை வேலைக்குச் செல்லும் போது பணத்தை பொலிஸிடம் ஒப்படைத்தார்.பொலிஸ் உரிமையாளரிடம் பணத்தை ஒப்படைத்தார்.