Short story competition-27

Short story competition-27


 🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝

               -----------------------------------

🔹𝗡𝗼: 27
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.R.Saara Fathima Almarjan
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Akkaraipattu

#Edukinniya  #StoryCompetition

     ➖➖➖➖➖➖➖


வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில்   வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை  கண்டு
அந்தப் பொதியைத் திறந்து பார்த்தார் .அதற்குள் சாரதி அனுமதிப் பத்திரமும் சில ஆவணங்களும் ஒரு தொகைப்பணமும் இருந்தது. அதனைப் பார்த்தவுடன் அவர்  மனதில் ஒரு கவலை உணர்வு தோன்றியது.  "யாரோ இதைத் தொலைத்து விட்டார்கள்" என மிகவும் வருந்தினார். அப்போதுதான் உரியவருடைய விலாசத்தைப் பார்த்தார்.                                  
          இந்தப் பத்திரம் இல்லாவிட்டால் அவருக்கு வாகனம் ஓட்ட முடியாது. "இதனால் அவர் சாரதிப் பத்திரம் எடுக்கும் வரை அவருடைய தொழில் பாதிப்படையும்" என்பதை உணர்ந்தார். தொழிலின் மகத்துவத்தை அவரும் அறிந்தவன் என்பதனால் அதனை அவரிடம் ஒப்படைக்க நினைத்தார்." இதனை அவர் இழந்து மிகவும் வேதனை பட்டிருப்பார்" என்பதை உணர்ந்தார். உடனடியாக அவருடைய விலாசத்திற்குச் சென்று அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்றார். அப்போது அவருடைய வீட்டைப் பார்த்ததும் அவருக்கு  தூக்கிவாரிப் போட்டது. ஏனென்றால் அவருடைய வீடு இருக்கும் நிலைமை மிகவும் மோசமாய் இருந்தது.அவருடைய வீடு ஓலைக் கூரையினால் ஆக்கப்பட்ட ஒரு குடிசையாகும்.  இவர் ஒரு கூலித் தொழிலாளி என்பதை உணர்ந்தார். வீட்டிற்குச் சென்று இந்தப் பொதியை ஒப்படைத்தார். அவர் கணேசனை அன்புடன் உபசரித்தார். அவர் இந்தப் பொதியைக் கண்டவுடன் மிகவும் சந்தோசப்பட்டார். கணேஷனைக்   கட்டியணைத்தார். அவருடைய கண்ணில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவர் மீது கணேஷனுக்குப் பரிதாபம் ஏற்பட்டது. அவருடைய மனைவி பிள்ளைகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
"உன்னை  வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்"  எனக் கூறினார்கள். சிறிது நேரத்தின் பின் கணேஷன் வீடு திரும்பினான் .

அவர் ஏழ்மையாக இருந்தாலும் மற்றவரின் தொழிலை மதித்து உதவி செய்தார்.

"இரக்கப் போனாலும் சிறக்கப் போ"