🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 36
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: Muna
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Ulapane
#Edukinniya #StoryCompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
அதை கண்ட கணேஷன் ஒரு நிமிடம் திகைத்து நின்றார்.போதியின் மேல் ஒரு பழைய துணியால் மூடியிருந்தது.அருகில் போய் பர்வையிட்டபோது, அந்த போதியில் இருந்து சிலமுறை அசைவது போல இருந்தது. அவன் எச்சரிக்கையுடன் அதைத் திறந்த போது,அதற்குள் ஒரு பசு குழந்தை பீனிகாய் போல சுருண்ட நிலையில் துங்கிக் கொண்டிருப்பது கண்டெடுத்தான்.பனிக்காற்றில் நடுங்கும் அந்த குழந்தையின் மூச்சு மெதுவாக வந்துக்கொண்டிருந்தது. கணேஷனின் இதயம் வலி கொண்டது. அவனது குழந்தையின் முகம் நினைவிற்கு வந்தது.
''யாரவது இதைக் கைவிட்டதா?"என்று அவன் பதைத்தான். அருகிலும் ஒருவரும் இல்லை.விடியற்காலை மெல்ல வீதிகள் விழித்துக்கொண்டு இருந்தாலும், இது போன்ற சம்பவம் யாரும் எதிர்பாக்க முடியாத ஒன்று. அந்த குழந்தையை மெதுவாகத் தூக்கிக்கொண்டு, தன்னுடைய வீட்டு பக்கம் திரும்ப ஆரம்பித்தான்.
"இதிலேயே என்ன வாழ்க்கையின் பாதை மாறப்போகுது போல இருக்கு.."என்று எண்ணம் வந்தது.
வீட்டில் மனைவி பரமா குழப்பத்துடன் கதவைத் திறந்தாள்." யாரு இந்தக் குழந்தை?"என்று வினவ, கணேஷன் சுருக்கமாக
அனைத்தையும் கூறினான். அவர்கள் இருவரும் குழந்தையை குழிக்கவைத்து , சாப்பாடு கொடுத்து,மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்துச்சென்றார்கள்.
மருத்துவமனை தகவலின்படி,குழந்தை சுமார் 2 நாட்களாக பசிக்காயமாக இருந்திருக்க வேண்டும் என்றும்,அதற்கு இன்னும் பெயரே இல்லை என்றும் கூறினர். மூன்று வாரங்கள் கழித்து,குழந்தை நிலைமை மேம்பட்டது.கணேஷன் குடும்பம் அந்நக் குழந்தையை தங்களது பிள்ளையாகவே ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு"அருள்"என்ற பெயர் வைத்தனர்-கடவுளின் அருளாக வந்தவனென்று நம்பிக்கையுடன்.
கணேஷனின் வாழ்க்கை அந்த நாள் முதல் புதிய அர்த்தம் பெற்றது.
சாலைகளில் துப்பரவு செய்யும் வேலையும், தன் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலையும் மாறாமல் இருந்தாலும்,"அருள்"வந்ததிலிருந்து அவர் இதயத்தில் ஒரு பரிபூரணத்துவம் இருந்தது.
இத்துடன் கதையின் முடிவு-வாழ்க்கையின் சின்ன தருணங்கள் சில, நாம் எதிர்பாராத ஆசீர்வாதங்களை கொண்டு வரக்கூடும்.