🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 06
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: Fairoos Fatha
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Paddakaddu
#Edukinniya #StoryCompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
அதனை எடுத்து திறந்து பார்த்ததும் அதிர்ச்சியடைகின்றார். அதில் நிறைய பணம் இருந்தன. உடனே பொதியை எடுத்துக் கொண்டு வேலை லீவு போட்டு விட்டு தனது வீட்டுக்குச் சென்று மனைவியிடம் நடந்ததைக் கூறுகின்றார் நமது கஷ்டம் எல்லாம் தீரப் போகின்றன என்றும் கூறிச் சந்தோசப் பட்டனர் அடுத்த நாளே தனது வேலையை விட்டு விலகி அந்த பணத்தை வைத்து அவன் சொந்தத் தொழில் ஒன்றைத் தொடங்கி அதில் பெரிய இலாபம் கண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார். திடிரெனத் தன்னை யாரோ அழைக்க திடுக்கிட்ட அவர் தான் இதுவரை கற்பனை உலகில் இருந்தோம் என்று உணர்ந்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டு திரும்பி பார்க்கின்றார். அருகில் நண்பன் நிற்பதைக் கண்டார். அவனிடம் பொதியைப் பற்றி கூறிவிட்டு அக்கம் பக்கம் விசாரித்துப் பார்க்கின்றார். பொதிக்குரியவர் யாரும் இல்லையே என்று நினைத்தவராக மாநகர சபையில் விடயத்தை கூறிவிட்டு பொலிஸ் நிலையத்தில் பொதியை ஒப்படைக்கின்றார். பொதிக்குச் சொந்தகாரர் ஏற்கெனவே பொதி தொலைந்ததை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததால் அவர்களை அழைத்து அவர்களிடம் பொதி ஒப்படைக்கபட்டது . பொதியைப் பெற்றுக் கொண்ட கணவன் மனைவி கணேக்ஷனின் மனைவி,பிள்ளைகளை பார்க்க ஆசைப்பட்டு கணேக்ஷனின் வீட்டுக்குச் சென்றார்கள். அங்கு அவரது கஷ்ட நிலமையையும் அறிந்து கொண்டனர். கணேக்ஷனின் வறுமையிலும் அவரது நேர்மையைப் பாராட்டினார்கள். அவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதனால் கணேக்ஷனின் பிள்ளைகளின் படிப்புச் செலவு முழுமையாக நாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறி அவரது கையில் சிறிய தொகை பணத்தையும் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அவரது நேர்மை அவரது கனவுகளை நிறைவேற்றியது.