Short story competition-30

Short story competition-30


 🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝

               -----------------------------------

🔹𝗡𝗼: 30
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: R.Hamdha
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Nammuwawa

#Edukinniya  #StoryCompetition

     ➖➖➖➖➖➖➖


வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில்   வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை  கண்டு
தன் கைகளில் எடுத்து பிரித்துப் பார்த்தார். விதியின் வலையில் சிக்கி பிரித்துப் பார்த்தவர் "இது என்ன மாவு போல இருக்கு" என தன் கைகளால் அதை எடுத்து கீழே கொட்டிக் கொண்டிருக்கும் போது பின்னால் இருவர் வந்து அவரின்  இரு கைகளையும் பிடித்துக் கொண்டனர். ஒன்றும் அறியாமல் அந்த அப்பாவி தலையை இரு பக்கமும் திருப்பித் திருப்பிப் பார்த்தார். அவர்கள் காவல்துறையினரை சேர்ந்தவர்கள் என்பதை புரிந்து கொண்ட கணேஷன் என்ன நடப்பது என்பது கூட தெரியாது அவர்களின் முகத்தையே ஒரு சிறுபிள்ளையை போல் பார்த்துக் கொண்டிருந்தான். இவனுடைய கையில் இருந்ததை வாங்கி அவர்கள் பேசிக் கொண்டதில் அது ஒரு போதைப்பொருள் என்பதை உணர்ந்து கொண்டான் கணேசன். இடி விழுந்தால் போல் இருந்தது அவனுக்கு. ஒரு நிமிடம் பேச்சு மூச்சு இன்றி  இருந்தவன் தன்னை கொஞ்சம் சுதாகரித்துக் கொண்டு தன் பக்க நியாயத்தை எடுத்துக் கூற அந்த ஏழைத் தொழிலாளி எவ்வளவோ முயன்றும் அதைக் கேட்க எவரும் தயாராக இல்லை.
               போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்ட கணேசன், தன்னை நிரூபிக்க முயன்று தோற்றுப்போய் தன் இரு கண்களையும் மூடினான் நெருப்பு தனல் போல் இருந்தது அவன் கண்கள் .கண்ணீர் வடிந்தது. என்ன கஷ்டம் என்றாலும் சிறிதும் சலராது தன் பக்கம் இருக்கும் மனைவியும் ஆயிரம் கனவுகளோடு புன்னகைக்கும் தன் இரு மகள்களையும்  நினைத்துக் கொண்டார்." அப்பா இன்னைக்கு கிளாஸ் பீஸ் கட்டிடலாம் இல்ல.." என்ற மகளின் குரல்கள் காதுகளில் அலைமோத கண்ணீரை அவனால் அடக்க முடியவே இல்லை.
            அந்த போன் கோல் அழிய இருந்த வாழ்க்கையையே திசை திருப்பியது. கணேஷன் குற்றவாளி இல்லை என்பது உறுதியாக அவனை அங்கேயே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர் அவர்கள். நேரம் 11 மணி இருக்கும் .சித்திரை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. இன்று வேலை செய்தால்தான் பணம் கிடைத்திருக்கும் இன்றைய வேலைப்பாழாய் போய்விட்டது மகளின் கிளாஸ் பீஸிற்கு என்ன செய்வேன் ...என்று யோசித்தவரே சாலை நெடுக நடந்து கொண்டிருந்தான் கணேசன். *"தான் உழைத்தால் தான் தனக்கு எவரின் உதவிகரமும் எம்மை நோக்கி நீழ்வது அரிது"* என்ற நிதர்சனத்தை புரிந்தவனாக..



(பொதியின் உள்ளே தனக்கு ஏதாவது கஷ்டத்திற்கு வழி கிடைக்குமா என ஆர்வத்துடன் அவன் பிரித்து பார்த்தது அவனின் "தான் உழைத்தால் தான் தனக்கு இவருடைய உதவிக் கரமும் எம்மை நோக்கி நீள்வது அரிது.. " என்ற சிந்தனையில் புலப்படுகிறது.