Short story competition-10

Short story competition-10


 🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝

               -----------------------------------


🔹𝗡𝗼: 10

🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.H.F.Haaniya

🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Valaichchenai


 #Edukinniya #StoryCompetition


     ➖➖➖➖➖➖➖



வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு

ஒரு நிமிடம் *திடுக்கிட்டு* நின்றார். பிறகு அவர் இந்த பொதியை *எடுப்போமா? வேண்டாமா?* என்று சிந்தித்திருந்த வேளையிலே அவரோடு கூட வேலைக்கு வந்த அவரது நண்பரான கமலன் அவரை "அடே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்? விரைவாக வா... துப்புரவு பணிகளை நாம் சீக்கிரம் முடிக்க வேண்டும்". என்று சத்தம் போட, உடனே கணேஷன் அந்த பொதியை சற்றும் யோசிக்காமல் தனது பையனுள் வைத்துவிட்டு துப்புரவு பணிகளை ஆரம்பிக்கச் சென்றார்.

துப்புரவு பணிகளை முடித்த பின் அவர் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் அந்த பொதி பற்றி அவருக்கு ஞாபகம் வந்தது. உடனே அந்த பொதியை பிரித்துப் பார்த்தார். 

அதன் உள்ளே *லட்சக்கணக்கான பணங்களும்,ஆவணங்களும், தங்க நகைகளும்* காணப்பட்டன. 

அவர் முதலில் எடுத்த முடிவு *"அதை யாருக்கும் தெரியாமல் தான் வைத்துக் கொள்வோம்"*. என்று, தான் பிறகு அவருடைய *நேர்மைத் தன்மை* அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எப்படி ஒரு *குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமோ* அதே போன்று ககணேசனுடைய உள்ளமும் குறுகுறுக்க தொடங்கியது. உடனே அவர் அதில் உள்ள பொருள்களை எல்லாம் அந்தப் பொதியிலேயே வைத்துவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு விரைந்து சென்றார். காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு வந்தார். 


*சில நாட்கள் கழிந்தன....*


 வழமை போல கணேஷ் தனது துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையிலே பொலிஸார் அவரை தேடி வந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவருடைய *உள்ளம் படபடத்தது* .அங்கு போன பிறகு தான் தெரிந்தது அவர் ஒரு *தொழிலதிபருடைய பொருளைப் பாதுகாத்துக் கொடுத்திருக்கிறார்.* என்று *ஆம்,*

அன்று கணேஷன் எடுத்த பொதி அந்தத் *தொழிலதிபருடையது* தான். அந்தத் தொழிலதிபர் முக்கியமான ஒரு சந்திப்பிற்காக அதனை எடுத்துச் செல்லும்போது அதனை தவற விட்டிருக்கிறார். அதனை கணேஷன் தான் எடுத்துக் கொடுத்திருக்கிறார். இதனை கேள்வியுற்ற தொழிலதிபர் மிகவும் சந்தோஷமடைந்து கணேஷனின் நேர்மைத் தன்மையை பாராட்டினார். கணேஷனின் ஆசை என்னவென்று கேட்டார். 

கணேஷன் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் கேட்டார். கணேஷனும் சற்றும் தாமதிக்காமல் கூறினார், 

"நான் எடுக்கும் சம்பளமானது எனது *அன்றாட செலவுக்கு போதாது.*"

 ஆகவே, நீங்கள் *எனது பிள்ளைகளின் கல்விச் செலவுக்கும் அவர்களுடைய எதிர்காலத்துக்குமான பண உதவியை* எனக்கு வழங்க வேண்டும். என்று தாழ்மையுடன் கூறினார். 

தொழிலதிபர் சற்றும் தாமதிக்காமல், "*நீ எனக்கு செய்த உதவிக்கு இதெல்லாம் ஒரு பெரிய வேலையே இல்லை"* என்று உடனே கணேஷனுடைய நேர்மை தன்மையை பாராட்டி அவருடைய பிள்ளைகளின் கல்விச் செலவுக்கான பணத்தையும் வழங்கினார். 

கணேஷனுக்கு ஒரே மகிழ்ச்சி. அன்றிலிருந்து *அவருடைய கண்ணில் இருந்த பிள்ளைகள் பற்றிய கவலைகள் குறைந்தன*.

அன்றிலிருந்து அவர் சந்தோஷமாக வாழத் தொடங்கினார்.